தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-06 15:05 GMT
கரூர் மாவட்டம், கட்டிபாளையத்திலிருந்து கந்தம்பாளையம் செல்லும் தார்சாலை ஓரத்தில் நெடுகிலும் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு அந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாக்கடை கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை தீண்டி பல்வேறு மர்ம காய்ச்சல்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்