தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-06 14:59 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குளம்போல் தேங்குகிறது. இதனால் அருகில் குடியிருக்கும் வீட்டுவாசிகள் மருத்துவமனையில் பிரசவத்திற்காக தங்கி இருக்கும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கழிவுநீரில் தேங்கியுள்ள கொசு உற்பத்தியினால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்