பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் பணி
திருப்பூர் 15 வேலம்பாளையம் கரியகாளியம்மன் கோவில் அருகில் அரசு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பு சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட குழி 15 நாட்கள் ஆகியும் வேலை நடைபெறாமலும் குழி மூடப்படாமலும் உள்ளது. குழந்தைகள் பின்புறம் கேட்டு வழியாக சென்று வருகிறார்கள். அருகே உள்ள பேக்கரியில் இருந்து சாலை தோண்டப்பட்டு சேறும், சகதியும் ஆக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு முன்பு இந்த தோண்டப்பட்ட குழிகள் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியை விரைந்து முடிப்பார்களா?
கலை,15 வேலம்பாளையம்.
7373242433