பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கால்வாய் அமைக்கும் பணி

Update: 2022-09-03 13:46 GMT
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் ஊராட்சி முத்தனூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. அந்த கழிவுநீர் கால்வாய் முழுமையாக கட்டப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் மூலம் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும், மழை காலங்களில் வெள்ள நீரும் இந்த கழிவுநீர் கால்வாய் மூலம் சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட வேண்டும். ஆனால் பாதி அளவு மட்டும் கால்வாய் கட்டியிருப்பதால் மீதமுள்ள பகுதி தரைமட்டமாக உள்ளதால் கழிவுநீரும், மழை காலங்களில் மழை நீரும் அதிக அளவு வந்து கால்வாயையொட்டி உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்