ஊஞ்சலூர் பேருராட்சி 3-வது வார்டுக்கு உள்பட்ட பரிசல் துறை வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. அந்த கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?