விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமம் 2-வது வார்டு நடுத்தெருவில் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். ஆதலால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.