புகாா் பெட்டி எதிரொலி

Update: 2022-09-02 14:15 GMT
தியாகதுருகம் அருகே குருபீடபுரம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கழிவுநீர் வாயக்கால் தூர்வாரப்படாமல் தேங்கி நின்றது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உருவானது. இந்த செய்தி நமது தினத்தந்தி புகாா் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் அந்த வாய்க்காலை தூர்வாரி நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்தி புகாா் பெட்டிக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்