குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-01 12:34 GMT
கரூர், சாய்பாபா கோவில் அருகில் உள்ள சாலையின் ஓரத்தில் ஒரு கழிவுநீா் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பாசி பிடித்தும், குப்பைகளாலும் மாசுபட்டு உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கைப்பிடித்துக் கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட கழிவுநீா் வாய்க்கால் மற்றும் அதில் கிடக்கும் குப்பைகளால் கொசுக்கள் பரவி சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்படி கழிவுநீா் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்