ஊட்டி மெயின் பஜார் பகுதியில் ஆங்காங்கே சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கிருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.