தேனியை அடுத்த பீரங்கநாதபுரத்தில் இருந்து தேவாரம் செல்லும் பிரதான சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. மேலும் கால்வாயை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதுடன் குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறியுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதுடன் புதர்களையும் அதிகாரிகள் அகற்ற வேண்டும்.