ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை அருகில் சாக்கடையில் இருந்து கழிவுநீர் சாலையில் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.