புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருச்சி பஸ்கள் செல்லும் முனையத்தில் நடுவே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் சிதிலமடைந்து பயணிகளுக்கும், பஸ்களுக்கும் இடையூறாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக நடந்து செல்லும் முதியவர்கள் இதனால் தவறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.