குளத்தில் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-08-24 12:33 GMT
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் அம்மன் குளம் உள்ளது. இக்குளமானது மாதிரிப்பட்டி, கலிங்கிப்பட்டி, சின்னபழனிபட்டி ஆகிய பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் விராலிமலை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் எண்ணை கழிவுகளை இங்கு வந்து சிலர் ஊற்றிவிட்டு செல்கின்றனர். இதனால் குளத்து நீரானது மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த நீரால் மீன்கள் ஆங்காங்கே செத்து மிதக்கின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்