முழுமை பெறாத சாக்கடை கால்வாய்

Update: 2022-08-22 15:34 GMT

திசையன்விளை பேரூராட்சி கருப்பசாமி கோவில் தெரு அருகில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய் பணி முழுமை பெறாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் தினமும் அவதிப்படுகிறார்கள். தேங்கிய சாக்கடை நீரில் பன்றிகள் குதித்து புரள்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. வாகனங்களில் செல்வோர் அந்த குழிக்குள் விழுந்து விடுகிறார்கள். எனவே அந்த கால்வாய் பணி முழுமை பெற செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்