சாலையை சீரமைப்பார்களா?

Update: 2023-02-15 17:17 GMT

வாலாஜாவில் இருந்து அனந்தலை, தகரகுப்பம், முசிறி, செங்காடு மோட்டூர், படியம்பாக்கம், வள்ளுவம்பாக்கம், வாங்கூர், பொன்னப்பந்தாங்கல் வழியாக காவேரிப்பாக்கம் மற்றும் பாணாவரம் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த வழியாக தினமும் காலை மாலை என விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கின்ற பழ வகைகள், கீரைவகைகள், காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை மோட்டார்சைக்கிள் மூலம் வாலாஜாவுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். மாணவ-மாணவிகளும் அந்த வழியாக சென்று படிக்க வருகின்றனர். அனந்தலை ஏரிக்கரை பகுதியில் இருந்து வாலாஜா வரும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. பள்ளத்தில் வாகனத்துடன் விழுந்து எழுந்து செல்கின்றனர். அனந்தலை பகுதியில் குவாரிகள் செயல்படுவதால் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் சாலை பழுதடைந்து விட்டது. சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழ்வாணன், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்