வேகத்தடை அமைப்பார்களா?

Update: 2023-06-04 17:02 GMT

திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்தச் சாலையில் மார்க்கத்தில் திம்மனாமுத்தூர் ஊருக்கு செல்லும் வழி உள்ளது. அந்த ஊரில் இருந்து வரும் வாகனங்கள் திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகும் நிலை இருந்து வருகிறது. எனவே இரு பக்கமும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிதாக நவீன வேகத்தடை அமைக்க வேண்டும் இதனால் விபத்து தவிர்க்கப்படும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்