பேரணாம்பட்டு சாக்கர் ஊராட்சியைச் சேர்ந்த ஒரு தியேட்டர் பின்பக்கம் சிவராஜ் நகர் மெயின் ரோடு சிமெண்டு சாலை கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சிமெண்டு சாலையைச் சீரமைக்க கோரி பலமுறை புகார் மனு கொடுத்தும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.