வடலூர்- சேத்தியாத்தோப்பு கூட்டுரோடு செல்லும் சாலையின் நடுவே பல்வேறு இடங்களில் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு வேளைகளில் எதிர்திசையில் வரும் வாகனங்களின் ஒளியால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் வாகனஓட்டிகளின் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து தடுப்புக்கட்டைகள் அமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.