கம்பத்தில் இருந்து ஊத்துக்காடுக்கு செல்லும் சாலை சேதமடைவது தொடர்கதையாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் ஊற்று போல் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுப்பதால் தான் சாலை சேதமடைகிறது. எனவே தண்ணீர் பெருக்கெடுப்பதை தடுத்து, சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.