விக்கிரவாண்டியில் வடக்கு புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நிகழ்ந்தபடி உள்ளது. எனவே ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மேம்பாலம் கட்டும் பணியை முடித்து விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.