நடைபாதை சரி செய்யப்படுமா?

Update: 2024-07-21 19:56 GMT

திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் உள்ள தேவாலயத்தின் முன்பு உள்ள கால்வாய் மேல் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையின் சிமெண்டு சிலாப் உடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.

- ராஜ், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்