சாலையோரம் முள்புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2022-08-11 12:20 GMT

சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாவில் இருந்து திருவலம் வரை இரு பக்கமும் முள்செடிகள் வளர்ந்து சாலை வரை நீண்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வருவோர் சாலையோரம் ஒதுங்கி செல்லும்போது முள்செடிகள் முகத்தில் அடிக்கிறது. சாலையோரம் வளர்ந்துள்ள முள்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

த.நித்தியானந்தம், காரை

மேலும் செய்திகள்