பள்ளத்தை சரி செய்ய கோரிக்கை

Update: 2026-05-03 18:13 GMT

திருச்சி மாவட்டம் உடையான்பட்டி அருகே உள்ள சிந்தாமணி நகரில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதிய தார்சாலை போடப்பட்டது. உடையான்பட்டி வழியாக செல்லும் கே.கே.நகர் மெயின் சாலையில் இருந்து சிந்தாமணி நகர் செல்ல இணைப்பு சாலையாக போடப்பட்ட தார்சாலை தொடங்கும் இடத்தில் காவிரி நீர் திறந்து முடுவதற்காக ஒரு இணைப்பு தொட்டி அமைக்கப்பட்ட நிலையில் பள்ளம் மூடப்படவில்லை. இந்நிலையில் தார்சாலை போடும்போது பள்ளத்தை விட்டுவிட்டு சாலை அமைக்கப்பட்டது. இதனால் காவிரி குடிநீர் திறக்கும் போது அதிகப்படியான தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனார் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்