பழுதான சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-05-03 18:16 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் நரசிங்கபுரத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் முற்றிலும் பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையின் இருபுறமும் வடிகால்கள் இல்லாததால் கழிவுநீர் தேங்கி நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதி பொதுமக்கள் நலன்கருதி இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்