வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-05-03 16:54 GMT

கரூர் மாவட்டம் கரூர்-ஈரோடு செல்லும் சாலையில் ஓலப்பாளையம் பிரிவு சாலைக்கு எதிரே, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரிக்கும், உப்புப்பாளையம் பகுதிக்கும் செல்வதற்காக மண்சாலை போடப்பட்டது. இந்த மண்சாலை ஜல்லிக்கற்கள் பதித்து மெட்டல் சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையை பள்ளி , கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வந்தனர். இவ்வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே இந்த சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்