சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2023-01-11 16:41 GMT

செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் சில இடங்களில் சாலை அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது. குறிப்பாக செங்கம் அருகே உள்ள மண்மலை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சிறுபாலத்தில் சாலை அமைக்காமல் உள்ளதால் அடிக்கடி அந்தப் பகுதியில் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. முறையாறு அருகில் டோல்கேட் அமைக்கும் பணிக்காக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வரும் பணியும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. திருவண்ணாமலை செல்லும் சாலையில் திருவண்ணாமலை வெளிப்புற பைபாஸ் சாலை அமைக்கும் இடத்திலும் சாலை அமைக்கும் பணிக்காக சாலைகள் பெயர்த்து போடப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களில் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. சாலை அமைக்கும் பணிைய விரைந்து முடிக்க வேண்டும்.

-சுப்பிரமணியம், கரியமங்கலம்.

மேலும் செய்திகள்