காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் பெரிய ஏரிக்கரையோரம் இருக்கும் தார் சாலை சேதம் அடைந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்ல சிரமப்படுகின்றனர். ஒருசில நேரத்தில் விபத்துகளும் நடக்கின்றன. ஆகையால் புதுப்பட்டு-ஆலப்பாக்கம் செல்லும் ஏரிக்கரை சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிவேலன், புதுப்பட்டு.