தடுப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-15 17:44 GMT

வேலூர் தோட்டப்பாளையம் காட்பாடி செல்லும் சாலையின் நடுவே தடுப்புக் கம்பிகள் உள்ளது. அவற்றில் ஒரு சில தடுப்புகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அதன் வழியாக பொதுமக்கள் ஆபத்தை உணராமல் சாலையை கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமான இரும்பு தடுப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்த், வேலூர் 

மேலும் செய்திகள்