மதுரை திருப்பரங்குன்றம் ஹர்விப்பட்டியை அடுத்த எஸ்.ஆர்.வி.நகர் பகுதிகளில் தார்ச்சாலை வசதி இல்லை. இதனால் தற்போது பெய்து வரும் கோடை மழையால் சாலையில் முற்றிலுமாக தண்ணீர் தேங்கி சகதி காடாக காட்சியளி்க்கிறது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள், அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?