தெருக்களில் தேங்கும் மழைநீரால் அவதி

Update: 2023-06-21 13:09 GMT

அரக்கோணம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள டவுனால் தெரு, சுப்பராயன் தெரு, சரோஜினி தெரு ஆகிய தெருக்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் வெளியேறாமல் குளம் போல் தேங்கி நிற்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் மழை நீரால் பள்ளம் இருப்பது தெரியாததால் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே தெருக்களில் தேங்கும் மழைநீரை வடிய வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்குமார், அரக்கோணம். 

மேலும் செய்திகள்