தெரு சாலைகளை சீரமைக்க வேண்டும்

Update: 2024-02-25 17:13 GMT

வேலூர் மாநகராட்சி 2-வது வார்டு பகுதியில் தெருக்களில் ஒகேனக்கல் குடிநீருக்காக குழாய் பதிக்க சிமெண்டு, தார் சாலைகளில் பள்ளம் தோண்டினார்கள். அந்தப் பள்ளத்தை சரியாக மூடவில்லை. இதனால் தெருக்கள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. தெருக்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீராமுலுரெட்டி, பெரியபுதூர். காட்பாடி.  

மேலும் செய்திகள்