மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில்வே மேம்பாலத்தில் உள்ள சாலை பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இப்பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனார். மேலும் இரவு நேரங்களில் பயணிக்கும் இருச்சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?