வேகத்தடைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-10-12 11:44 GMT

செங்கம்-போளூர் சாலை முதல் முன்னூர்மங்கலம், மாரியம்மன் கோவில், புதுப்பாளையம், காரப்பட்டு, கடலாடி, உள்பட போளூர் வரை நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. அந்த வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் இருப்பதே தெரியவில்லை. வேகத்தடைகளுக்கு எந்த வண்ணமும் பூசாததால் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். வேகத்தடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமசுப்பு, செங்கம்.

மேலும் செய்திகள்