வேலூர் மாநகராட்சி 54-வது வார்டு விருபாட்சிபுரத்தில் ஜின்னு முதலியார் முதல்தெருவில் கழிவுநீர் கால்வாய் மற்றும் போதிய சாலை வசதி சரியில்லை. தற்போது தொடர்ந்து மழைப் பெய்து வருவதால் எங்கள் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாத இடங்களில் கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும். ஒரு சில இடங்களில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும்.
-கந்தவேல், வேலூர்.