சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2023-05-17 17:36 GMT

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் புதுப்பேட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்தச் சாலையில் கலெக்டர் இல்லம், பள்ளிகள், வங்கிகள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். அந்தப் பகுதியில் செல்லும் கழிவுநீர் பிளாஸ்டிக் பொருட்களால் அடைக்கப்பட்டு நிரம்பி சாலையின் நடுவே ஆறாக ஓடுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. போக்குவரத்தை சரி செய்ய அங்கு நிற்கும் காவலர்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராதாகிருட்டிணன், பொம்மிகுப்பம்.

மேலும் செய்திகள்