சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-08-13 13:24 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருமஞ்சன கோபுரம் அருகில் தென் ஒத்தவாடை தெரு உள்ளது. இந்தத் தெருவில் கோபுரத்தின் அருகில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கடந்த 2 நாட்களாக கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இது குறித்து திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்