கரடுமுரடான சாலை

Update: 2023-05-10 17:08 GMT

ஆம்பூர் அருகே பெரியாங்குப்பத்தில் இருந்து எட்டிக்குட்டை பகுதிக்கு சாலை செல்கிறது. இச்சாலை மோசமாக, கரடு முரடாக காட்சி அளிக்கிறது. இந்தச் சாலையில் பள்ளி மாணவர்களும், விவசாயிகளும் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சாலைப் பணி எடுத்த ஒப்பந்ததாரர் இதுவரை பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலை பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதா அல்லது சாலை அமைத்தவாறு மோசடி நடந்துள்ளதா? என்பதை மாவட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்த வேண்டும்.

-கிராம பொதுமக்கள், பெரியாங்குப்பம்.

மேலும் செய்திகள்