சாலையோரம் ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும்

Update: 2023-03-01 16:43 GMT

விழுப்புரம்-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை பேரணாம்பட்டு புத்துக்கோவில் பகுதியில் இணைகிறது. கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் பேரணாம்பட்டு பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக புத்துக்கோவில் பகுதியில் இருந்து லாரி செட், பஸ் நிலையம், சாலப்பேட்டை, மத்தூர் வரை சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்தனர். மேலும் சாலையின் இருபக்கமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால் மீண்டும் சாலையோர கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவேசாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் செய்வதை நெடுஞ்சாலைத்துறையினர் தடுக்க வேண்டும்.

-ஜெயராமன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்