வாலாஜா நகரில் உள்ள 2 தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அந்த 2 சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி உள்ளனர். சாலையோரம் தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை நடத்தி வருகின்றனர். இதனால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு கடைகள், கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காசிநாதன், வாலாஜா.