மதுப்பிரியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சாலை

Update: 2026-02-15 13:57 GMT

தர்மபுரி மாவட்டம் சிக்க மராண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ரெயில் நிலையம் செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாக மது பிரியர்களின் கூடாரமாக மாறிவருகிறது. பொதுமக்கள் காலை முதல் மாலை வரை ரெயில் நிலையம் செல்ல அடிக்கடி வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விட்டுச் செல்கின்றனர். இதனால் சாலையில் செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்