வழிகாட்டி பெயர் பலகை அமைக்க வேண்டும்

Update: 2026-02-15 13:00 GMT

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஏரி கடைக்கால் பகுதியில் இருந்து வடக்கு புறமாக செல்லும் சாலை எம்.எம்.கார்டன் நகர் பகுதியில் உள்ள ஆலமரத்தை ஒட்டி இரண்டாக பிரிந்து செல்கிறது. கிழக்கு புற சாலை சிறுகுடல், கீழப்புலியூர், எழுமூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், மேற்கு புற சாலை செங்குணம் ஐ.டி.ஐ., என்.எச். ரோடு, வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்கின்றன. இந்நிலையில் சாலை பிரியும் இடத்தில் முறையான வழிகாட்டி தகவல் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வழி தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். எனவே சாலை பிரியும் இடத்தில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்