சாலை சேதம்

Update: 2022-12-14 11:39 GMT

போளூரில் இருந்து ஜவ்வாதுமலைக்கு செல்லும் பிரதான சாலை வீரப்பன் தெரு ஆகும். இந்தத் தெருவில் 10 இடங்களுக்கு மேல் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அவதிப்படுகின்றனர். மழையால் குழிகளில் நீர் தேங்கி உள்ளது. அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வருவோர் தவறி விழும் அவலம் நடந்து வருகிறது. போளூரில் உள்ள வீரப்பன் ெதரு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

-திருநாவுக்கரசு, போளூர்.

மேலும் செய்திகள்