இருளில் மூழ்கிய ரெயில்வே மேம்பாலம்

Update: 2023-06-07 17:45 GMT

திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் தாமலேரிமுத்தூரில் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் மேம்பாலம் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். எனவே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகளை எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுதாகர், தாமலேரிமுத்தூர்.

மேலும் செய்திகள்