நடைபாதை கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-05-10 13:21 GMT

வந்தவாசி நகராட்சி 19-வது வார்டு தேரடி பகுதியில் உள்ள சன்னதி தெரு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாகும். இந்தத் தெருவில் இருபுறமும் காய்கறி கடைகள் வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறார்கள். சில நேரங்களில் எதிரெதிரே வாகனங்கள் ஒதுங்கி செல்லும்ேபாது விபத்துகளும் ஏற்படுகின்றன. வந்தவாசியில் உழவர் சந்தை உள்ளது. அங்கு வைத்து வியாபாரிகள் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யலாம். இதற்கு நகராட்சி நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதை வியாபாரிகளை உழவர் சந்தைக்கு மாற்றி அனுப்பி அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-எஸ்.முத்துக்குமார், வந்தவாசி. 

மேலும் செய்திகள்