சாலையில் பள்ளம்

Update: 2024-02-18 17:26 GMT

வேலூரை அடுத்த அரியூர் பகுதியில் தங்கக் கோவிலுக்கு செல்லும் சாலையின் நடுவே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் பள்ளம் உருவாகி தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் இருக்க அந்தப் பள்ளத்தின் மேல் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மரக்கிளையை வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும்.

-மாடசாமி, அரியூர்.

மேலும் செய்திகள்