குண்டும், குழியுமான சாலை

Update: 2026-09-06 13:45 GMT

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூரில் இருந்து கணுவாய் செல்லும் வழியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இந்த பணி முடிந்த பிறகும் தோண்டப்பட்ட சாலை முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் குண்டும், குழியுமாக சாலை காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்