கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் கட்டாரிப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு முறையான அணுகுச்சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் பல ஆண்டுகளாக கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே பள்ளிக்கு நிரந்தர அணுகுச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.