பர்கூர் ஊராட்சி ஒன்றியம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் உள்ள தென்றல் நகர் மற்றும் இந்திரா நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் சிமெண்டு சாலை பல ஆண்டுகளாக சிதலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் குடியிருப்பவர்கள் நடந்து மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே காலதாமதம் இன்றி இப்பகுதிக்கு தரமான தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.