ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இச்சாலைகளில் அன்றாடம் பயணிக்கும் பொதுமக்கள், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் சிரமமடைகின்றனர். அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் சேதமடைந்து கிடக்கும் சாலைகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?