தஞ்சாவூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே இந்திரா நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.ஆனால் சாலைவசதி, மின் விளக்கு வசதி எதுவும் இல்லாம் உள்ளது. இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். இருட்டாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை, மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை